செவ்வாய், 25 ஜனவரி, 2011

பிரிதல் 10.

................................................
1, பிறரிடம்
பேசியிருக்க வேண்டாம்.
என்னிடம் சொல்லாதவற்றை.
.................................................................................................................................
2. எப்போதும் நீ வரும்
வழக்கமான வீதியையும்
மாற்றியிருக்கிறாய்.
………………………………………………………………………………………..
3 .அறை மூலையில்
நீ கொடுத்த பொம்மை.
அறை முழுக்க நீ..
.......................................................................................................................................
4. எனக்கும் சொல்லிக்கொடு.
என்ன செய்தாய்..?
என்னை..?
…………………………………………………………………………………..
5. வெளித் தள்ளிக் கதவடைப்பதை
விடவும்
உள்ளே நுழையுமுன்
தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
...............................................................................................................................
6, உனக்கு பதிலாய்
காற்று எழுப்புகிறது.
என் காலைகளை.
................................................................................................................................
7, திறந்து தானிருக்கிறது,கதவு.
நீ தட்டும் ஒசையும்
கேட்கிறது.
………………………………………………………………………………………
8.முதல் மழைக்கும்
கடைசி மழைக்கும்
இடைப்பட்டது வாழ்க்கை.
......................................................................................................................................
9. தூரத்துப் புள்ளி ரயில்
நொடிகளில் கடந்து போகும்.
அடுத்தமுறையும்.
...............................................................................................................................
10.என்னிடம் தான்
வந்து கொண்டு இருக்கிறாய்.
எனைத் தாண்டிச் சென்ற பின்னரும்.
...................................................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக